ஈரோடு மாவட்டம் பவானி அருகே மயிலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயி ஒருவர் கொண்டு வந்த எள் கடையிலிருந்து வாங்கி வந்துள்ளதாகவும், வியாபாரிகள் அதனை கொள்முதல் செய்யக் கூடாது, எனவும் கண்காணிப்பாளரிடம் கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.