Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் சங்கர் ஏலக்காய் வர்த்தகத்தில் முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு செய்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். போடிநாயக்கனூர் நகராட்சி மன்ற தலைவி ராஜராஜேஸ்வரியின் கணவரான சங்கர், கடந்த 30 ஆண்டுகளாக ஏலக்காய் வர்த்தகம் செய்து வருகிறார். இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் குறித்து, சங்கரின் வீடு மற்றும் ஏலக்காய் கிடங்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த சங்கர், திங்கட்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானதையடுத்து இரண்டாவது நாளாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved