அடையாளம் தெரியாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்க அனுமதி கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இறந்தவரின் கைரேகையை, ஆதார் கைரேகையுடன் ஒப்பிட்டு தகவல்களை வழங்குவது என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.