சென்னை திருவொற்றியூரில் டிப் டாப்பாக உடை அணிந்திருந்த நபர் செல்போன் வாங்கிவிட்டு பணம் அனுப்பியதை போல் நடித்து ஏமாற்றிய திருடனை சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே பாலமுருகன் என்பவரின் செல்போன் கடைக்குள் புகுந்த இளைஞர், 16 ஆயிரம் ரூபாய் செல்போனை 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கினார். அப்போது, ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை போல் நடித்த அவர் பணத்தை அனுப்பியதாக மெசேஜை மட்டும் காண்பித்து விட்டு புறப்பட்டார். பணம் வந்தற்கான குறுஞ்செய்தி வராத நிலையில் குழம்பிபோன ஊழியர்கள் வெளியே சென்று பார்த்த போது, இளைஞர் ஓடிவிட்டார்.