கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கி,அவரது குடும்பத்தினருக்கு மரபு உரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாயை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற தமிழ் வார விழாவின் நிறைவு நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவர், முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,சேகர் பாபு ,மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.