திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வீட்டில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது இறந்தே பிறந்ததா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் - ஜெனினா தம்பதிக்கு தலா 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 5-ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை இறந்து பிறந்ததால், வீட்டில் புதைத்ததாக ஜெனினா தெரிவித்துள்ளார்.