தனியார் நிறுவன உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற சுங்க துறை அலுவலர்கள் நான்கு பேருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் நிறுவனத்திற்கு விதித்த அபராதத்தை குறைக்க, திருச்சி மத்திய சுங்க , கலால் மற்றும் சேவை வரி அலுவலர்கள் 4 பேர் லஞ்சம் பெற்ற வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தவறு செய்த 4 பேர் மீதும் நீதிமன்றம் கருணை காட்ட விரும்பவில்லை என கூறி, அவர்களுக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.