ஜேசிபி ஓட்டுநரின் உடல் மீட்பு : கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெரியவிளை சாலை பெட்ரோல் பங்க் அருகில் அகஸ்தீஸ்வரம் மலையன்விளையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஜேசிபி எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் நெல்லை மாவட்டம் மானூர் கீழ பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த செல்லபாண்டி (வயது 33) என்பவர் ஜேசிபி டிரைவராக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் இன்று இன்று அலுவலகம் முன்பு காலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னியாகுமரி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மோப்ப நாய் சம்ப சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து சோதனை நட நடத்தினர். சிறிது தூரம் சென்ற மோப்பநாய் ஆனால் மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை . இதைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சிதறி கிடந்த ரத்த மாதிரிகளை சேகரித்தனர் . இறந்த நபர் கிடந்த அலுவலகத்தில் சிசிடிவி காமிரா இல்லை என்பதால் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link காருக்கு வழி விடாமல் சென்றதாக கூறி வாக்குவாதம்