Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொங்கனாங்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில், கற்களை உடைப்பதற்காக வெடி வைக்கும் போது சிதறும் கற்கள் பல அடி தூரத்துக்கு பறந்து வந்து விவசாய நிலங்களில் விழுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய கற்கள் வந்து விழுவதால் விவசாயக் கூலி தொழிலாளர்கள் கூட வேலைக்கு வருவதில்லை என்றும், இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயம், தற்போது கல்குவாரிகளால் மேலும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved