உயிரிழந்த குட்டி யானை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில் குட்டி யானை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்க்கு சென்ற ஜீரகள்ளி வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானையின் பிரேத பரிசோதனைக்கு பிறகு இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். Related Link தெருநாய் கடித்து 4 பேர் காயம்- மருத்துவமனையில் அனுமதி