டங்க்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்றி நிரந்தர தீர்வுகாண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். மதுரை மேலூர் அருகே டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக போராடி வரும் அரிட்டாபட்டி, வல்லாளபட்டி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் பெரிய சூழ்ச்சி உள்ளதாக தெரிவித்தார்.