கரூர் அருகே தக்காளி லோடு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், தக்காளிகள் சாலையில் சிதறி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றி சென்ற சரக்கு வாகனம், தவளப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், கிரேன் மூலம் சரக்கு வாகனத்தை போலீசார் அப்புறப்படுத்தினர்.