லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மற்றும் சிமெண்ட் லாரி விபத்து ஏற்பட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரிலிருந்து கோவைக்கு சிமெண்ட் லாரியை சரவணன் என்ற ஓட்டுநர் இயக்கி சென்ற போது பின்னே கள்ளிமந்தயத்திலிருந்து கோவை நோக்கி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த ஷிப்ட் கார் ஒன்று இடது புறமாக சிமெண்ட் லாரியை முந்த முயற்சித்தது அப்போது முன்னே சென்ற லாரி மெதுவாக சென்று கொண்டிருந்ததால்.திடீரென காரை ஓட்டி வந்த கள்ளிமந்தயம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கட்டுப்பாட்டை இழந்து அதே லாரி மீது எதிர் திசையில் யுடன் போட்டு கார் மோதி விபத்து ஏற்பட்டது இதில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகா எங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இது தொடர்பாக அங்கிருந்த CCTV மூலம் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. Related Link கோவிலுக்கு முன்பு பீடம் வைத்த விவகாரத்தில் மோதல்