தென்காசி மாவட்டம் குற்றாலம் கார் பார்க்கிங் பகுதியில் புகுந்த 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குற்றாலம் கார் பார்க்கிங்-ல் மலைப்பாம்பு சுற்றித் திரிந்ததை பார்த்த மக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறை, தீயணைப்பு துறை உதவியோடு நீண்ட போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தனர்