திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கட்டிட வேலைக்கான கூலி தராமல் சுமார் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, எஸ்.பி. அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். தாளக்குடி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ராஜேஷ் என்பவர், கட்டிட மேஸ்திரி இளவரசனிடம் புதிய வீடுகள் கட்டித்தர ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.