விருதுநகரில் மாணவ, மாணவிகள் 11 பேர் 30 திருப்பாவை பாடல்களை பாட, 151 பேர் ஆண்டாள் வேடமணிந்து தொடர்ந்து 30 நிமிடம், 30 விநாடிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை புரிந்தனர். நடேசர் நாட்டியப் பள்ளி சார்பில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நிகழ்த்திய நிகழ்ச்சி இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் மற்றும் அவார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.