கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 22,072 கன அடியாக இருக்கும் நிலையில், காவிரி ஆற்றில் இருந்து 20,652 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மாயனூர் காவேரி ஆற்றில் விநாடிக்கு 22,072 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இதில் 20,652 கன அடி நீர் காவிரி ஆற்றிலும், 1,420 கன அடி நீர் பாசனத்திற்காகவும் திறக்கப்பட்டுள்ளது.