2 டன் ரேஷன் அரிசி : திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். திருத்தணி ரயில் நிலையத்தில் அரக்கோணம் ரயில்வே போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நடைமேடை மற்றும் சுற்றுச்சுவர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 90 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் அரிசி பதுக்கி வைத்திருந்தவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. Related Link குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்