தன்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுவதை தாம் விரும்புவது இல்லை என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய படத்தில் கிளாமர் காட்சிகள் இருக்கும் ஆனால் ஆபாசம் இருக்காது எனவும், கதை எழுதும் போதே அதனை தவிர்த்துவிடுவேன் என்றும் தெரிவித்தார்.