Also Watch
Read this
Posted on: May 11, 2025 06:40 AM
By: Srini Vasan

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து தனது கனவு வாகனமான வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை பரிசாக வழங்கியுள்ளதாக, இயக்குநர் பிரேம் குமார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தார் காருக்காக நீண்ட நாள் காத்திருந்ததாகவும், ஒருகட்டத்தில் சலிப்பாகி வேண்டாம் என முடிவெடுத்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் நடிகர் சூர்யா தனது ஆசையை நிறைவேற்றியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 96, மெய்யழகன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் இயக்குநர் பிரேம் குமார் என்பது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved