தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அனைவரும் ஒரே குடும்பம் என்பதையே வெளிப்படுத்த விரும்பியதாகவும் கன்னட மொழியையோ, மக்களையோ இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார்.