திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வரலட்சுமி தனது கணவர் நிக்கோலாய் சந்தேவ் மற்றும் தாயாருடன் அதிகாலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக கணவருடன் இணைந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதாக கூறினார். முன்னதாக வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் உடன் பக்தர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.