இந்தோனேசியாவின் பாலி தீவில் எரிமலை வெடித்ததில் 11 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் மண்டலம் எழுந்தது. மத்திய இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி ((Mount Lewotobi Laki-Laki volcano)) எரிமலை வெடித்து சூடான சாம்பலை கக்கி வருகிறது. இதையடுத்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலிக்கும் இடையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இந்த எரிமலை இது 3 முறை வெடித்தது குறிப்பிடதக்கது.இதையும் படியுங்கள் : பாலிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திரும்பியது..