டெல்லியில் இருந்து பாலிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் எரிமலை வெடிப்பை தொடர்ந்து மீண்டும் டெல்லிக்கு திரும்பி வந்தது. இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றான பாலி தீவில் Mount Lewotobi Laki Laki என்ற எரிமலை வெடித்து பத்தாயிரம் அடி உயரத்திற்கு சாம்பலை உமிழ்ந்தது. இது எட்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவிய நிலையில், அங்கு சென்ற ஏர் இந்தியா விமானம் பாலி விமான நிலையத்தில் இறங்க முடியாமல் டெல்லிக்கு திரும்பியது. டெல்லி விமான நிலையத்தில் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர்களுக்கு ஹோட்டல் வசதி, கட்டண வாபஸ் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு டிரம்பு மதிய விருந்து..