கோவில் படத்தில் வரும் வடிவேலு காமெடியை போல மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், திமுகவின் பெயரை பொறித்து மக்கள ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு மற்றும் மத்திய அரசு திட்டங்கள் என 5 கோடியே 47 லட்சத்து 280 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா முழுவதும், மத்திய நிதியில் 260 திட்டங்களும், மத்திய அரசு உதவியில் 54 திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.