தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்துபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வரும் நிலையில், இதையும் தனிப்பட்ட கொலை என்ற அளவோடு தான் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் அராஜகத்திற்கு மத்தியில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை எனவும் அவர் சாடியுள்ளார்.இதையும் படியுங்கள் : போதைப்பொருள் வழக்கு - நடிகர் கிருஷ்ணா கைது..