சமூக நீதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சித்தராமையாவிடம் பாடம் படிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சாதிவாரி மக்கள்தொகை சர்வே எடுப்பதற்கான தேவை மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டிற்கு தான் அதிகமாக இருக்கிறது என்றும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சாதி வாரியான விவரங்கள் இல்லாததால் அது ரத்து செய்யப்படும் நிலை உருவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக நீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் தமிழ்நாடு அரசு தனியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.இதையும் படியுங்கள் : "முருகன் பிறந்த தமிழ்நாட்டில் பாஜக தோற்கடிக்கப்படும்"