Also Watch
Read this
By: Web Team

டிஎன்பிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கோவை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றிபெற்றது.
டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் அணி விளையாடியது.
இறுதியில் திருப்பூர் அணி 16 புள்ளி 5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அசத்தல் வெற்றி வெற்றது.