Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்ததை எச்சரித்ததற்காக நடத்துநர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.
திருத்தணி பேருந்து நிலையத்தில் கிளம்பிய பேருந்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.
அப்போது படியில் தொங்கியபடி சாலையில் கால்களை உரசிய படி பயணித்த மாணவர்களிடம் படிக்கெட்டில் தொங்க வேண்டாம் என்று நடத்துநர் நரேந்திரன் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நடத்துநரை தகாத வார்த்தையில் திட்டியதோடு அவரை கடுமையாக தாக்கினர்.