திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், செந்தமிழ் வேதங்களின் அடிப்படையில் முற்றோதுதல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்பாபிஷேகத்தையொட்டி தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, செந்தமிழ் வேதங்கள் அடிப்படையில் 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு முற்றோதுதல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்... ஆபத்தான முறையில் பைக்கில் கடந்து செல்லும் மக்கள்