ஜம்முவில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட Tawi ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த 9 பேரை, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் போராடி மீட்டனர். மதன் லால் என்ற தொழிலாளி மணல் அள்ள தவி ஆற்றுக்கு சென்ற நிலையில், திடீரென நீர்மட்டம் உயரத் துவங்கி பின்னர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. Jewel Chowk பாலத்தின் அடியே சிக்கித் தவித்த அவர், 2 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டார். இதே போல் தர்ப்பணம் கொடுப்பதற்காக சென்று ஆற்றில் சிக்கித் தவித்த 8 பேரும் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். சில குதிரைகளும் மீட்கப்பட்டன.இதையும் படியுங்கள் : அணுசக்தி தளங்களை மறுகட்டமைப்பு செய்தால் தாக்குதல்... ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை