Also Watch
Read this
By: Web Team

ஈரான் மீண்டும் அணுசக்தி தளங்களை கட்டமைக்க முயற்சித்தால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தற்போதைக்கு ஈரான் அணு குண்டுகளை தயாரிக்கப்போவதில்லை எனவும், அவ்வாறு தயாரிக்க நினைத்தால் அதுவே அவர்களது இறுதி கட்டமாக இருக்கும் என்றும் கூறிய அவர்,
அமெரிக்க தாக்குதலுக்கு முன்பு அணுசக்தி தளங்களில் இருந்து ஆயுதங்களை அகற்ற ஈரானுக்கு போதிய நேரம் இருக்கவில்லை என்றும், அது மிகப்பெரிய வெற்றி எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பாக ஈரான் அணுசக்தி தளத்தில் இருந்து 400 கிலோ யுரேனியம் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று ஏற்கனவே ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.