அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.இன்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், தீர்ப்பை ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.தீர்ப்பை ஒத்திவைத்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக் உத்தரவு.கடந்த 2006ல் திண்டிவனத்தில் சி.வி.சண்முகத்தை அவரது வீட்டில் வைத்து கொலை செய்ய முயற்சி.பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் வந்த போது காருக்கு அடியில் ஒளிந்து உயிர் தப்பினார் சண்முகம்.சி.வி. சண்முகத்தை கொலை செய்யவிடாமல் தடுத்த அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவர் கொலை.20 பேர் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு -சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது.இதையும் படியுங்கள் : சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு