Also Watch
Read this
By: Web Team

ஆட்சி செய்த தனக்கு நோபல் பரிசு தந்திருக்க வேண்டும் என பேசிய கெஜ்ரிவாலை பாஜக கிண்டல் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, தனக்கு நோபல் பரிசு தந்திருக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோருவது நகைப்புக்கு உரியது எனவும், திறமையின்மை, அராஜகம் மற்றும் ஊழல் ஆகிய பிரிவுகள் இருந்திருந்தால், அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசு கிடைத்திருக்கும் எனவும் விமர்சித்தார்.
மேலும்,கெஜ்ரிவாலுக்கு மனநலம் சரியாக இருக்கிறதா என சோதிக்க வேண்டும் எனவும் சச்தேவா கிண்டல் செய்துள்ளார். அதோடு, ஆம் ஆத்மி ஆட்சியின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளையும் அவர் பட்டியலிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved