விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் புழுக்கள் கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். தாயனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் வளத்தி சாலையில் உள்ள அடுப்பங்கரை என்ற உணவகத்தில் பீப் பிரியாணி வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று பிரியாணியை பிரித்து பார்த்தபோது, கறியில் வெள்ளை நிற புழுக்கள் நெளிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சாப்பிட்டதை வாந்தி எடுத்த அவர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதல் உதவி சிகிக்சை எடுத்துக் கொண்டார்.இதையும் படியுங்கள் : ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக விற்பதாக புகார்... அதிகாரிகளின் துணையுடன் விற்பனை என குற்றச்சாட்டு