தஞ்சை பெருவுடையார் கோவிலில் மஹாவாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளை ஒட்டி, அம்மனுக்கு தேங்காய்ப்பூ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னிதி கொண்டு அருள்பாலித்து வரும் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நடப்பாண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையும் படியுங்கள் : பல பெண்களுடன் தொடர்பிலிருந்த பி.எஸ்.எஃப் வீரர்... கணவரின் செயல்களை தட்டி கேட்ட மனைவி