ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பெண்களுடன் தொடர்பிலிருந்த கணவனை தட்டிக் கேட்ட மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனிதா என்ற பெண்ணிற்கும் எல்லை பாதுகாப்பு படை வீரரான வேலன் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வேலன் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, எல்லாம் அவருக்கு பெண்கள் தொடர்பு அதிகரித்து வந்ததாகவும், இதனை அனிதா கண்டித்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென அனிதா உயிரிழந்த நிலையில், மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதையும் படியுங்கள் : திருப்பாச்சூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்... வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்