தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பகலில் நோட்டமிட்டு இரவில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பாவூர்சத்திரத்தை சேர்ந்த இம்மானுவேல்ராஜ் என்பவர் தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஜாவா இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிசென்றனர். இதனையடுத்து அக்கம்பக்க வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் பகலில் நேட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.