Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் காவல் நிலையம் எதிரே இயங்கி வரும் நியாய விலைக்கடையில், விலையில்லா ரேஷன் அரிசி முறைகேடாக விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசியை, கடையில் பணிபுரியும் ஊழியர் வெளிநபர்களுக்கு கிலோ 7 ரூபாய் என விலை வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடைக்கு வந்த வெளிநபர் ஒருவர் ரேஷன் கடைக்கு உள்ளே சென்று அரிசி மூட்டையை தூக்கி வந்து இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.