Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து 6 பேர் பலியான சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
கல்குவாரி விபத்து தொடர்பாக, மல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்த விஏஓ பாலமுருகன், மானாமதுரை துணை வட்டாட்சியர் வினோத்குமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பணிமாறுதல் பெற்ற ஆட்சியர் ஆஷா அஜித், துணை வட்டாட்சியர் வினோத்குமார் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ததுடன்,
அவரை காளையார்கோவிலில் பணியமர்த்த உத்தரவிட்டார்.
அதேபோல விஏஓ பாலமுருகனை மீண்டும் பணியில் சேர்க்க தேவகோட்டை துணை ஆட்சியருக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.