சென்னை அடுத்த ஆவடி அருகே நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அய்யப்பாக்கம்-அண்ணனூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.