ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் சோடா பாட்டில் தயாரிக்கும் கடையில் திடீரென சிலிண்டர் வெடித்ததில் படுகாயம் அடைந்த சிறுமி, அலறி துடித்தபடி வெளியே ஓடி வரும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தக்கோலத்தை சேர்ந்த அரி என்பவர் தனது வீட்டில் குடிசை தொழிலாக சோடா பாட்டில் தயாரித்து வந்துள்ளார். அதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில், 11 வகுப்பு படித்து வரும் அவரது மகள் படுகாயம் அடைந்தார். மேலும் வீட்டிற்குள் இருந்த ஃபேன் உடைந்து தலையில் விழுந்ததில் அரியின் மனைவி படுகாயம் அடைந்துள்ளார்.இதையும் படியுங்கள் : இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து... டிவிஎஸ் இருசக்கர வாகனம் சாலையை கடக்க முற்பட்டதில் விபத்து