Also Watch
Read this
By: Fyrose Banu

உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் மண்டல மறுமலர்ச்சி திமுகவின் சார்பில் தேர்தல் நிதி அளிப்பு மற்றும் கட்சி வளர்ச்சி நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி மாநில மதிமுக நிர்வாகிகள் வழங்கிய தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி நிதியை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

ம.தி.மு.க 234 தொகுதியிலும் போட்டியிடும்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கல்பட்டியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் படித்த மாணவி மதம் மாற்றம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக எழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மதம் மாற்றம் செய்யப்படவில்லை என சிபிஐ உச்ச நீதிமன்றம் இன்று அறிக்கை தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் அந்த சம்பவம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் அதனை முழுமையாக விசாரித்து யாரேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறையின் பொறுப்பு என்று கூறினர். தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் 234 தொகுதிகளில் என்று பதில் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved