திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், கோயிலை இடிக்க வந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. முடிகொண்டான் பகுதியில் பழமைவாய்ந்த பெரிய பிடாரி அம்மன் கோயில் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளது. இந்தநிலையில், சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோயிலை இடித்து அகற்ற முயன்றனர்.இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்... ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது கும்பாபிஷேகம்