Also Watch
Read this
By: Manigandan Raja

சீர் வரிசை :
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த வாரம் தைப்பூசத் திருவிழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனி முருகனுக்கு சீர் கொண்டுசென்றனர்.
இதில் தேன், திணைமாவு,மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கினர் .
மேளதாளம் முழங்க ஆடிப்பாடி வள்ளிக்கு சீர்வரிசை பொருட்களை கொண்டு சென்று பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved