Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம், பாலாஜி நகர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூர் முத்தீஸ்வரன் கோவில் அருகே பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல், 50 சவரன் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்றது.
அதேபோல் விக்னேஷ் நகரில் ஓர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வீட்டிற்கு அந்த கும்பல் சென்றபோது அப் பகுதியினர் கத்தி கூச்சலிட்டதால் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved