பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு, முந்தைய மற்றும் பிந்தைய நிலை குறித்த செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேக்சர் தொழில்நுட்படம் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் மூலம், பஹவல்பூரின் மார்கஸ் சுபான் அல்லா வளாகம் மற்றும் முரித்கேவின் மார்கஸ் தய்பா வளாகங்களில் இருந்த பயங்கரவாத முகாம்கள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளன என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. முறையாக திட்டமிட்டு துல்லியமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் -இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகளின் நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன.