செர்னாப் நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு திறந்து விடப்படும் நீரை இந்தியா முடக்கி உள்ளது. செனாப் நதியின் குறுக்கே உள்ள பாக்லிஹார் அணையின் ஷட்டர்களை மூடி பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் 90 சதவிகிதம் வரை தடுக்கப்பட்டு விட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போன்று ஜீலம் நதியின் கிருஷ்ணகங்கா அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் அணைகளின் ஷட்டர்கள் மூடப்படுவதாக தெரிகிறது. ஷட்டர்களை மூடும் பணிகளை தேசிய நீர்மின்சக்தி உற்பத்திக் கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.