ரஷ்யா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்களினால், அந்நாட்டின் தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால், அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள 4 விமான நிலையங்களிலும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.