அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்பில் அஞ்சலி செலுத்த உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் மன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளன்று அங்கு ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு ஜூன் 14 ம் தேதி நடைபெறும் அணிவகுப்பில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மன்னர் சார்லஸ் கருப்பு கைப்பட்டை அணிந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவ அணிவகுப்பின் நிகழ்வில் அரச குடும்பத்தினர் கருப்பு கைப்பட்டைகளை அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.